BBC News தமிழ் - முகப்பு BBC News தமிழ் - முகப்பு
- லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்பட சர்ச்சை: பின்னணி என்ன?on July 5, 2022 at 4:41 pm
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் எனபவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
- முஸ்லிம்கள் பற்றிய நாடகத்தை இடைநிறுத்திய பஜ்ரங் தள உறுப்பினர்கள்on July 5, 2022 at 4:29 pm
"பெண்ணின் தந்தை தனது மகளிடம் மேடையில் விடைபெறும் காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. அப்போது சிலர் வந்து 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழங்கத் தொடங்கினார்கள். நாடகத்தை நடத்தி முடிக்க அனுமதிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். பார்வையாளர்கள் கூட அழுதனர். அவர்கள் எங்களில் யாருடைய பேச்சையும் கேட்க மறுத்துவிட்டனர்"
- அதிமுக நெருக்கடி: நீதிமன்றத்தில் அடுத்தடுத்த மனுக்கள் - ஜூலை 11இல் பொதுக்குழு நடக்குமா?on July 5, 2022 at 3:48 pm
அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு என இரண்டும் குறித்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறுவது அதிமுக வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருத்தணியில் முதியவர் தற்கொலை - நீதி கேட்டு மறியல் செய்த பழங்குடியினர்on July 5, 2022 at 3:12 pm
ஜாதி சான்றிதழ் வழங்குவதற்காக முழுமையாக ஆவணம் தயார் செய்யப்பட்டு அது வழங்கப்படும் வேளையில், அந்தப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இடமாற்றலாகிறார்கள். அந்த இடத்துக்கு புதிய அதிகாரி வந்ததும், அவர் ஆரம்பத்தில் இருந்து ஆவண தயாரிப்புப் பணியை மேற்கொள்கிறார். இதனாலேயே தாமதம் ஏற்படுகிறது என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
- சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து 'பீர்' உற்பத்தி - குடிநீர் தட்டுப்பாடு எதிரொலிon July 5, 2022 at 2:30 pm
கழிவுநீரில் இருந்து குடிநீரா என்ற முகச்சுளிப்புடன் கூடிய கேள்வி எழுந்த போதிலும், இத்திட்டம் உரிய பலனை அளிக்கும் என அந்நாட்டு அரசு உறுதியாக நம்பியது. அதையடுத்து, இப்புதிய திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது.
- நூபுர் ஷர்மா வழக்கு: உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக 117 பேர் கடிதம்on July 5, 2022 at 12:21 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் உயரதிகாரிகள் குழு எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் அதன் "லக்ஷ்மண் ரேகையை" மிஞ்சிவிட்டது. அதுவே இதுபோன்ற திறந்தவெளி அறிக்கையை வெளியிட தங்களை கட்டாயப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
- அழிகிறதா வேடந்தாங்கல் சரணாலயம்? புதிய கல்குவாரிக்கு எதிர்ப்புon July 5, 2022 at 10:08 am
"மாவட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இயற்கையை அழிக்கத் துடிக்கும் நபர்களிடமிருந்து கிராம மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்" என்றார், ஓய்வு பெற்ற கர்னல் அர்ஜூன்.
- குஜராத் கலவரம்: நீதி கிடைத்தது யாருக்கு? நம்பிக்கை இழந்தது யார்?on July 5, 2022 at 10:06 am
தமது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 80 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரும் சிறையில் இல்லை என்கிறார் இத்ரிஷ். அனைவருக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது என்கிறார் அவர்.
- பலர் நடக்கவே பயப்படும் டைமண்ட் பாலம்; திகில் அனுபவத்திற்காக குவியும் சுற்றுலாப் பயணிகள்on July 5, 2022 at 9:00 am
ஜார்ஜியாவின் தேஷ்பாஷி பள்ளத்தாக்கில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலம் தரையில் இருந்து 280 மீட்டர் உயரம், அதன் நீளம் 240 மீட்டர்.
- லீனா மணிமேகலை காளி பட சர்ச்சை: டெல்லி, உத்தர பிரதேச காவல் நிலையங்களில் வழக்குப்பதிவுon July 5, 2022 at 8:45 am
லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?on July 5, 2022 at 6:57 am
நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
- எல்லா சாலைகளும் சுரங்கப்பாதையானால் உலகம் இப்படித்தான்on July 5, 2022 at 5:13 am
ரயில்கள், மின்சார லைன்கள், குழாய்கள், கேபிள்கள், சாக்கடைகள் ஆகியவற்றோடு, சாலைகளையும் நிலத்தடிக்குக் கொண்டுபோக சிலர் நீண்டகாலமாக விரும்புகிறார்கள். சாலைகளை நிலத்தடிக்கு மாற்றுவதால் ஏற்படும் தாக்கம் என்ன?
- லீனா மணிமேகலையின் 'காளி ஆவணப்படம் சர்ச்சை: "செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது"on July 5, 2022 at 4:46 am
"என் மேல் இறங்கும் காளி கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்" என்கிறார் லீனா மணிமேகலை.
- குப்பை தொட்டியில் வீசிய குழந்தையை மீண்டும் பெற வந்த தாய்on July 5, 2022 at 4:33 am
கர்நாடகா மாநிலத்தின் கொள்ளேகால் அருகே கணவர் பிரிந்து சென்றதால் வளர்க்க முடியாததால் குழந்தையை, அதன் தாய் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றார்.
- அமெரிக்காவில் ஜார்கண்ட் பெண்ணுக்கு ஹாக்கி பயிற்சி - யார் இவர்?on July 5, 2022 at 3:18 am
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.
- பாடம் பயில புதிய செஸ் ஆட்டம் கண்டுபிடித்த தமிழக தையல்காரர்on July 5, 2022 at 12:59 am
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர் எளிதாக கணக்கு, ஆங்கில பாடங்களைக் கற்கும் வகையில், புது வகையான செஸ் விளையாட்டை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளார் முருகன்.
- பாஜகவில் உறுப்பினராக இருந்தாரா லஷ்கர் தீவிரவாதி?: காங்கிரஸின் குற்றச்சாட்டும் பாஜகவின் பதிலும்on July 4, 2022 at 4:01 pm
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தாலிப் ஹுசைன் ஷா, பாஜகவின் தீவிர பணியாளர் என்று வர்ணிக்கப்படுகிறார்.
- ஆசிரியை ஊசியால் முகப்பருவை குத்தியதால் மாணவர் இறந்ததாக சர்ச்சைon July 4, 2022 at 3:50 pm
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் முகப்பருவை ஊசியால் குத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், பள்ளி மாணவர் உயிரிழப்பை பகடைக்காயாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக சம்பந்தப்பட்ட ஆசிரியை கூறியுள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
- இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம்on July 4, 2022 at 1:38 pm
மெக்காவில் உள்ள அல் நிம்ரா மசூதியில் நிகழ்த்தப்படும் அராஃபத் நாள் சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
- ஆஸ்திரேலியாவில் இந்து, முஸ்லிம் மதங்கள் விரிவடைவதன் பின்னணி என்ன?on July 4, 2022 at 12:58 pm
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மற்ற மேற்குலக நாடுகளை போன்றல்லாமல் ஆஸ்திரேலியாவில் தாமதமாகவே எவ்வித வேறுபாடுமின்றி அயல்நாட்டினருக்கான கதவுகள் திறக்கப்பட்டன.
- உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?on July 4, 2022 at 11:51 am
100 ஆண்டுகள் வாழ பெரியவர்கள் ஆசிர்வதித்தாலும், அது சாத்தியமில்லை என்று கருதப்பட்டது, ஆனால் இப்போது அப்படி இல்லை. 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இக்காணொளி:
- கர்நாடகாவில் போலீஸ் கூடுதல் டிஜிபியை கைது செய்த சிஐடி - என்ன நடந்தது?on July 4, 2022 at 11:48 am
ஒரு வாரம் கழித்து ஒரு தேர்வாளரின் விடைத்தாள் கசிந்தபோது இந்த சந்தேகம் உறுதியானது, அந்த நபர் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 130 கேள்விகளில் 21 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார், ஆனால் தேர்வில் அவர் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
- கிரிப்டோ ராணி: அமெரிக்க எஃப்பிஐ அதிகம் தேடும் 10 பேரில் ஒருவரானது எப்படி?on July 4, 2022 at 9:51 am
துபாய் நீதிமன்றங்களில் இருந்து கசிந்த ஆவணங்களின் விவரங்கள் முதன்முதலில் 2021-ஆம் ஆண்டு வெளிவந்தன. டாக்டர் ருஜாவை "வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குற்றவாளி" என்று குறிப்பிட்டு ஒரு வழக்கறிஞர் ஆன்லைனில் பதிவிட்டார்.
- 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்on July 4, 2022 at 8:29 am
100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். யுபுன் அபேகோனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- இலங்கையில் வெறிச்சோடிய சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடுon July 4, 2022 at 7:34 am
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
- காலரா தொற்றை தடுக்க இதை செய்யுங்கள் - மருத்துவர் விளக்கம்on July 4, 2022 at 5:32 am
காலராவுக்கான அறிகுறிகள் என்ன? வரும் முன் காப்பது எப்படி? வந்தால் செய்ய வேண்டியவை என்ன? ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து எளிமையாக விளக்குகிறார் மருத்துவர் பூபதி ஜான்.
- பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணைon July 4, 2022 at 4:37 am
அந்த கடிதத்தில் தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணவில்லை என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- ஏன் மனிதர்களால் முன்னாள் காதலை மறக்க முடிவதில்லை?on July 4, 2022 at 3:03 am
"நீங்கள் தீவிர வலி மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியாக அதிலிருந்து மீள்வீர்கள். உங்களைத் தூக்கி எறிந்த நபரை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால், நீங்கள் அதிலிருந்து மீண்டு புதியவரை நேசிப்பீர்கள்"
- பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் பட்டா பெற்ற காணி பழங்குடிon July 4, 2022 at 1:03 am
பட்டாவுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க முழு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
- மகாராஷ்டிரா அரசியல்: நரேந்திர மோதி, அமித் ஷா அடுத்து சாதிக்க விரும்புவது என்ன?on July 3, 2022 at 2:38 pm
ஒவ்வொரு மாநிலத்திலும், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து, படிப்படியாக பிராந்திய கட்சியின் அடித்தளத்தை அகற்றுவதுதான் மத்தியிலுள்ள பாஜகவின் வியூகம் என்று மூத்த பத்திரிகையாளர் விஜய் சோர்மோர் கூறுகிறார்.
- கல்லூரி வளாகத்திற்குள் பொட்டலாக இருந்த 15 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய கல்லூரி முதல்வர்on July 3, 2022 at 12:43 am
புதுச்சேரி தாகூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ், கல்லூரி வளாகத்தில் இருக்கும் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் காடுகள் அமைத்துப் பராமரித்து வருகிறார்.
- உணவும் வரலாறும்: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா?on June 28, 2022 at 12:05 pm
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரியான விரைவான உணவுகள், பூகம்பம் போன்ற அவசரகால சூழ்நிலைகளில், உயிர்காக்கும் விஷயமாக இருப்பதையும் மறுக்க முடியாது.
- அதிமுக நெருக்கடி: ஓபிஎஸ் தன் ஆதரவை இழந்தது எப்படி?on June 25, 2022 at 9:45 am
ஜூன் 23ஆம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், தொடர்ந்து எழுப்பப்பட்ட எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில் வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம். அவரைக் குறிவைத்து தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன. கட்சியின் தலைமைப் பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும்கூட, இப்படி வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
- சௌதியில் குழந்தையாக கைதாகி இளைஞராக விடுதலை ஆன முர்தஜாon June 25, 2022 at 6:27 am
தற்போது இளைஞராகிவிட்ட முர்தாஜா குரைரிஸ் ஒரு கட்டத்தில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்தார். பலத்த எதிர்ப்பு காரணமாக அது சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
- இந்திராவின் எமர்ஜென்சி: அந்த அரை மணி நேரத்தில் நடந்தது என்ன?on June 25, 2022 at 3:41 am
அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.
- அன்புக்கு காரணம் சொல்லும் அறிவியல்: மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்?on June 24, 2022 at 4:15 am
நாம் ஏன் முத்தமிடுகிறோம் என்பதற்கு நிறைய கோட்பாடுகள் உள்ளன. அவற்றில், சில நாம் பூமியில் பிறக்கும்போது ஏற்படும் அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
- அக்னிபத் திட்டமும் வேலைவாய்ப்பும்: இந்திய தொழிலதிபர்கள் சொல்வது என்ன?on June 21, 2022 at 1:03 pm
மஹிந்திரா குழுமத்தின் சேர்மனும் ட்விட்டரில் அதிதீவிரமாக இயங்கும் தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா, அக்னிபத் திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றி வெளியேறுகிற இளைஞர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளார்.
- உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?on June 21, 2022 at 1:39 am
முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்கும் அல்லது முழு செயல்முறையையும் மாற்றுவதற்கான சூத்திரம் இன்னும் கிடைப்பதற்கு இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த திசையில் பணியாற்றுகிறார்கள்.
- இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட குத்புதீன் ஐபக் - அடிமையாக இருந்தவர் அரசரானது எப்படி?on June 19, 2022 at 6:28 am
குத்புதீன் ஐபக் துருக்கியின் ஐபக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது குழந்தைப் பருவத்தில் அவர் தனது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகவும் அடிமைச் சந்தையில் விற்க நேஷாபூர் கொண்டு வரப்பட்டதாகவும் மொயின் அகமது நிஜாமி கூறினார்.
- ஆன்லைன் ரம்மி உங்களை அடிமைப்படுத்துவது எப்படி? உண்மையிலேயே பணம் சம்பாதிக்க முடியுமா? - நிபுணரின் விளக்கம்on June 18, 2022 at 9:08 am
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடந்த 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கேமின் பிண்ணனி என்ன? மக்களை ஈர்க்கும் அதன் அல்காரிதம் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?
- பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட லண்டனின் இந்திய ஆயாக்கள்on June 17, 2022 at 1:50 am
"கையில் இருந்த பணம் தீர்ந்தபோது, இந்தப் பெண்களும் தங்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்திற்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது."
- கூகுள் சுந்தர் பிச்சை முதல் ட்விட்டரின் பராக் அக்ரவால் வரை: அமெரிக்காவில் உயர் பொறுப்பை அலங்கரிக்கும் இந்தியர்கள்: வெற்றிக்கு காரணம் என்ன?on June 15, 2022 at 3:00 am
எப்படி இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இவ்வளவு திறம்பட செயலாற்றுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மேலும் இந்தியர்கள் ஏன் தாய்நாட்டில் பணிபுரியாமல் மேலை நாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்வியும் உண்டு. இதைப் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
- சர்வதேச உணவுப் புகைப்படப் போட்டி: விருது வென்ற இந்தியப் புகைப்படம்on June 11, 2022 at 11:13 am
வாஸ்வான் கெபாப்கள் மற்றும் பிற தெரு உணவுகளைக் கரி அடுப்புகளில் சமைக்கும் புகைப்படத்தை ஒரு பரபரப்பான தெருவில் இந்த இந்தியப் புகைப்படக் கலைஞர் எடுத்தார்.
- நூபுர் ஷர்மா: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவைச் சேர விடாமல் பாகிஸ்தான் தடுத்த வரலாறுon June 11, 2022 at 8:29 am
53 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடமிருந்து இந்தியா இப்போதைய எதிர்ப்பைக் காட்டிலும் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.
- பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்on June 11, 2022 at 1:52 am
2011-ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள டிக்கில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 72.1% மாணவிகளும் 74.2% மாணவர்களும் பெண்ணுறுப்பில் இருக்கும் சவ்வு கன்னித்தன்மையின் அடையாளம் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.
- மண் பாதுகாப்பு, சர்ச்சை பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டிon June 10, 2022 at 1:44 am
மண் வளத்தை காப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய பிற விஷயங்கள் குறித்தும் ஜக்கி வாசுதேவ் வெளிப்படையாக பேசியுள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது, கேட்கப்பட்ட ஒரு கேள்வியைத் தொடர்ந்து, நேர்காணல் அளிப்பதை பாதியிலேயே அவர் நிறுத்தினார். இதுபற்றி மேலும் விரிவாக அறிய இந்தச் செய்தியைப் படியுங்கள்.
- சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா?on June 8, 2022 at 2:41 am
சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு விண்வெளி வீரர்களை அனுப்பியதுடன், விண்வெளி நிலையத்தையும் அமைக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சீனா.
- சத்யேந்திரநாத் போஸ்: கூகுள் கொண்டாடிய இந்த இந்திய விஞ்ஞானி செய்த இமாலய சாதனை என்ன?on June 5, 2022 at 11:41 am
இந்தப் பெயரை பால் டைராக் சும்மா கொடுத்துவிடவில்லை. சத்தியேந்திரநாத் போசும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சேர்ந்து உருவாக்கிய போஸ் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் என்ற கோட்பாட்டில் சொல்லியுள்ளபடி இயங்கும் துகள்கள் இவை என்பதால்தான் போசுக்கு இந்தப் பெருமையைத் தந்தார் டைராக்.
- கச்சத் தீவு விவகாரத்தில் நடந்தது என்ன? - இந்தியாவால் மீட்க முடியுமா?on May 28, 2022 at 10:04 am
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.